கல்வி உரிமையை காக்க டெல்லியில் நாளை மாணவர் பேரணி

சென்னை: கல்வி உரிமையை காக்க டெல்லியில் நாளை நடைபெறும் மாணவர் பேரணியில் திரளாக பங்கேற்போம் என்று திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் கூறினார். திமுக மாணவர் அணி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியின் 16 மாணவர் அமைப்புகள் ஒன்று கூடி உருவாக்கிய யுனைடெட் ஸ்டூடன்ட்ஸ் ஆப் இந்தியா கூட்டமைப்பு, நாளை டெல்லியில் 25,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் நாடாளுமன்றம் நோக்கிய மாபெரும் மாணவர் பேரணி நடத்திட முடிவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக, திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் நேற்று பேட்டியளிக்கையில், ‘‘கல்வி உரிமையை காப்போம், இந்தியாவை காப்போம் என்ற முழக்கத்துடன் இப் பேரணி நடைபெறுகிறது. இதில் திமுக மாணவர் அணியினர் திரண்டு வர கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.

The post கல்வி உரிமையை காக்க டெல்லியில் நாளை மாணவர் பேரணி appeared first on Dinakaran.

Related Stories: