இதுகுறித்து அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்ட பதிவில், ‘பிரதமர் எலிசபெத் போர்னின் சேவையை பாராட்டுகிறேன். அவரது பணிகளை கண்டு வியப்படைந்தேன். எனக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தீர்கள். எங்களது திட்டத்தை தைரியமாக, அர்ப்பணிப்புடன் செயல்படுத்தினீர்கள். உங்களக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். எலிசபெத் போர்ன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததால், அவருக்குப் பதிலாக பிரான்ஸ் நாட்டின் மிகவும் இளைய வயது பிரதமராக கேப்ரியல் அட்டல் நேற்று நியமிக்கப்பட்டார். அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அலுவலகம் இதை தெரிவித்துள்ளது. 34 வயதான கேப்ரியல் அட்டல், அரசாங்க செய்தித் தொடர்பாளராகவும், கல்வி அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார். மேலும் தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என்று வெளிப்படையாக அறிவித்தவர். எனவே அவர் பிரான்சின் முதல் ஓரினச்சேர்க்கை பிரதமர் ஆவார்.
The post அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் மோதல் பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் திடீர் ராஜினாமா: 34 வயது ஓரினச்சேர்க்கையாளர் புதிய பிரதமராக நியமனம் appeared first on Dinakaran.