உக்ரைன் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணை வீச்சு: 4 பேர் பலி

கீவ்: உக்ரைனுக்கு எதிரான தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் நேற்று அதிகாலை உக்ரைனின் பகுதிகளை குறிவைத்து ரஷ்ய ராணுவம் ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதலை நடத்தின. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த நகரமான க்ரிவி ரிஹ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதில் 20க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் சேதமடைந்துள்ளன. இதேபோல் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது குறைந்தது சுமார் 4 ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் பல கட்டிடங்கள் சேதமடைந்தன. ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கி 30 பேர் காயம் அடைந்தனர்.

The post உக்ரைன் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணை வீச்சு: 4 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: