இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு 4 மணிக்கு முடிவடைந்தது. அதிக ஆர்வம் இல்லாததால் குறைவான அளவிலான மக்கள்தான் வாக்களிக்க வந்தனர். மாலை 3 மணி நிலவரப்படி 27.15% என பதிவாகியது. 4 மணி வரை 40 % வாக்கு பதிவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. 2018 தேர்தலில் 80% பதிவாகியது.வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணி தொடங்கிய.
அனைத்து இடங்களுக்கும் முடிவுகள் இன்று காலைக்குள் அறிவிக்கப்படும். தேர்தலில் வாக்களித்த பின்னர் பிரதமர்,ஷேக் ஹசீனா கூறுகையில்,‘‘ பிஎன்பி கட்சிக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. எதிர்க்கட்சிகள் வன்முறையில் ஈடுபட்ட போதும் மக்கள் வாக்களிப்பதற்கான ஒரு சூழ்நிலையை அரசு உருவாக்கியுள்ளது ’’ என்றார்.
The post எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில் வங்கதேச தேர்தலில் மந்தமான வாக்கு பதிவு: 40% வாக்குகள் மட்டுமே பதிவாகியது appeared first on Dinakaran.