சென்னை பல்கலைக்கழகத்தில் கல்லூரி பேராசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: நாளை தொடக்கம்

சென்னை: சென்னை பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், சென்னை பல்கலைக்கழகத்தில் கல்லூரி பேராசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி, முதல்கட்டமாக நாளை முதல் 12ம் தேதி வரை நடக்கிறது. 2ம் கட்ட பயிற்சி 18ம் தேதி முதல் 24ம் தேதி நடக்கிறது. பயிற்சியில், டிஜிட்டல் மார்க்கெட்டிங், கதை சொல்வது, உணவு பகுப்பாய்வு, உயிரி தகவலியல், மருத்துவ குறியீட்டு முறை, வணிக செயல்பாட்டு மேலாண்மை, உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதில், 1065 பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர்.

The post சென்னை பல்கலைக்கழகத்தில் கல்லூரி பேராசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: நாளை தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: