அம்பை தலைமை தபால் நிலையத்தில் தினமும் 12 மணி நேரம் ஆதார் சேவை

நெல்லை, ஜன.6: நெல்லை கோட்டத்தில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் தினமும் 12 மணி நேரம் ஆதார் சேவை வழங்கப்படும் என கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். நெல்லை, பாளை, அம்பாசமுத்திரம் ஆகிய தலைமை தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட உள்ளது. பொதுமக்களின் ஆதார் சேவையின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் தலைமை அஞ்சலகத்தில் ஆதார் பதிவுகளின் நேரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெருகி வரும் ஆதார் தேவையினை கருத்தில் கொண்டு, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், பணிக்கு செல்வோருக்கும் பயனுள்ளதாக அமையும் வகையில் இத்தகைய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தபால்துறையின் அலுவலக நாட்களில் இச்சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு நெல்லை அஞ்சல் கோட்டத்தின் கண்காணிப்பாளர் சிவாஜி கணேஷ் தெரிவித்துள்ளார்.

The post அம்பை தலைமை தபால் நிலையத்தில் தினமும் 12 மணி நேரம் ஆதார் சேவை appeared first on Dinakaran.

Related Stories: