திண்டுக்கல், கொடைக்கானல் சிறைகளில் தூய்மை பணியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

 

திண்டுக்கல், ஜன. 6: திண்டுக்கல் மாவட்ட சிறை மற்றும் கொடைக்கானல் கிளைச் சிறையில் தலா ஒரு துாய்மைப்பணியாளர் காலிப் பணியிடத்திற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: மதுரை மத்திய சிறை கட்டுப்பாட்டிலுள்ள திண்டுக்கல் மாவட்ட சிறை மற்றும் கொடைக்கானல் கிளைச்சிறையில் தலா ஒரு தூய்மைப்பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இப்பணியிடம் பொதுப்பிரிவு முன்னுரிமை, எஸ்.சி பெண் முன்னுரிமையற்றது என்ற இன சுழற்சிக்கு ஒதுக்கப்பட்டதாகும்.

இப்பணியிடத்தில் நேரடி நியமனத்திற்கு தகுதியான மேற்படி பிரிவினைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. துாய்மைப்பணியாளர் பணியிடத்திற்கு 1.7.2023 அன்றைய நிலையில் குறைந்தபட்சம் வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது (பொது-32, பிசி மற்றும் எம்பிசி -34, எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ ஆகிய பிரிவு-37) ஆகவும் இருக்க வேண்டும்.

முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பு இல்லை. துாய்மைப்பணியாளர் பதவிக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். தகுதியுள்ள நபர்கள் தங்களது கல்விச்சான்று, ஜாதிச்சான்று மற்றும் பிற சான்றுகளின் நகல்களுடன் விண்ணப்பத்தினை சிறைக் கண்காணிப்பாளர், மத்திய சிறை, மதுரை-16 என்ற முகவரியில் ஜன.25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல், கொடைக்கானல் சிறைகளில் தூய்மை பணியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: