டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகளுக்காக டெண்டர் விடும் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியது. வாக்குப்பதிவை வெப் காஸ்டிங் முறையில் நேரலை செய்வது மற்றும் வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்வதற்கான நிறுவனத்தை தேர்வு செய்யவும் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு வாகனங்கள், EVM, VVPT கொண்டு செல்லும் வாகனங்களில் GPS கருவி பொருத்தவும், டெண்டர் கோரியுள்ளது.