விருது பெற்ற ஆசிரியர்கள் கலெக்டரிடம் வாழ்த்து

 

ராமநாதபுரம், ஜன.5: கனவு ஆசிரியர் விருது பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், ‘கனவு ஆசிரியர்’ விருது வழங்கப்படுகிறது. அதன்படி கடந்த டிச. 19ம் நாமக்கல் மாவட்டம், விவேகானந்தர் கல்லூரியில் நடந்த நிகழ்வில் “கனவு ஆசிரியர் விருது 2023” என்ற விருதினை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி, வில்சி கிரேஸ், ராமநாதபுரம் அரசு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாசின் பர்வீன், கலைமேல் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஜெனிபர், முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆனந்தி, கீழச்செல்வனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பிராங்ளின் ரிச்சர்டு ஆகியோர்களுக்கு பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. விருதுகள் பெற்ற ஆசிரியர்கள் நேற்று கலெக்டர் விஷ்ணுசந்திரனை அலுவலகத்தில் சந்தித்து விருதுகளை காண்பித்து வாழ்த்துக்கள் பெற்றனர். விருது பெற்ற ஆசிரியர்களுக்கு கலெக்டர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

The post விருது பெற்ற ஆசிரியர்கள் கலெக்டரிடம் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: