சாவித்ரிபாய் பூலே பிறந்த நாள் விழா

குமாரபாளையம், ஜன.5: குமாரபாளையம் கலைமகள் வீதியில் இல்லம் தேடி கல்வித்திட்ட மையத்தில், இந்தியாவில் முதல் பெண் ஆசிரியரான சாவித்திரிபாய் பூலே பிறந்தநாள் விழா நடந்தது. ஆசிரியரின் படத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சுகந்தி, மாலை அணிவித்து மரியாதை செய்தார். சாவித்திரிபாய் பூலேவின் வாழ்க்கை வரலாறு, ஆசிரியராக அவர் எதிர் கொண்ட பிரச்னைகள் குறித்து குழந்தைகளுக்கு விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முதல் பெண் ஆசிரியரான அவரது வாழ்க்கை நிகழ்வுகளில் இருந்து பேச்சு போட்டிகள், வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் எலந்தகுட்டை மருத்துவ அலுவலர் சையத்குமமத் ஆதில்ஷா, விடியல் பிரகாஷ், ஆசிரியர் ஹெலன், கல்வித்திட்ட தன்னார்வலர்கள் ராணி, தீனா, அங்கப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post சாவித்ரிபாய் பூலே பிறந்த நாள் விழா appeared first on Dinakaran.

Related Stories: