தக்கலை அருகே சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் மாயம்

குமாரபுரம், ஜன.5: தக்கலை அருகே பரைக்கோடு சாஸ்தான் கோயில்விளை பகுதியை சேர்ந்தவர் பொன்னப்பன் (65). அவரது மகன் ஜெனில் (33). ஜெனிலுக்கு திருமணமாகி ரெம்மியா செரின் (31) என்ற மனைவியும் நான்கரை வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர் தக்கலை பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த 25ம் தேதி கிறிஸ்துமஸ் குடில் பார்க்க மார்த்தாண்டம் சென்று வருகிறேன் என்று பொன்னப்பனிடம் கூறிவிட்டு சென்றவர் காலையில் வெகு நேரமாகியும் காணவில்லை. இதனால் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் ஆகிய நிலையில் பல இடங்களில் தேடியும் பலன் இல்லை. அதைத்தொடர்ந்து குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடம் விசாரித்த போது அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் பயந்து போன பொன்னப்பன் அவரை யாராவது கடத்தி இருப்பார்களா? அல்லது எங்கேயாவது போய் விட்டாரா? என்ற கோணத்தில் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தக்கலை அருகே சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: