கல்லிடைக்குறிச்சியில் 10ம் வகுப்பு மாணவி ரயிலில் அடிபட்டு பலி

அம்பை, ஜன.3: கல்லிடைக்குறிச்சியில் 10ம் வகுப்பு மாணவி ரயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். கல்லிடைக்குறிச்சியில் பழைய காவல் நிலையம் அருகேயுள்ள ரயில்வே லைன் தெருவைச் சேர்ந்த மணிமாறனின் மகள் காயத்ரி (15). அங்குள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த இவர் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு செல்லும் வழியில் உள்ள வைராவிகுளம் ரயில்வே கேட்டிற்கும் கல்லிடைக்குறிச்சி ரயில்வே நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து விரைந்துவந்த தென்காசி ரயில்வே போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார், மாணவி எப்படி இறந்தார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கல்லிடைக்குறிச்சியில் 10ம் வகுப்பு மாணவி ரயிலில் அடிபட்டு பலி appeared first on Dinakaran.

Related Stories: