கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் கரூர் காந்திகிராமம் பூங்காவில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

கரூர், ஜன. 3: கரூர் காந்திகிராமம் பூங்காவில் இன்று மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் கருர் மாவட்டத்தில் டிசம்பர் 18 முதல் ஜனவரி 6ம்தேதி வரை 50 இடங்களில் காலை 10 மணி முதல் 3 மணி வரை முகாம்கள் நடைபெற்று வருகிறது. கரூர் மாநகராட்சியில் 16 நாட்கள் 16 இடங்களிலும், 3 நகராட்சிகளில் 9 நாட்கள் 13 இடங்களிலும், 8 பேரூராட்சிகளில் 7 நாட்கள் 16 இடங்களிலும், மாநகராட்சி ஒட்டியுள்ள புறநகர்ப்பகுதிகளில் 5 நாட்கள் 5 இடங்களிலும் நடைபெறுகிறது இன்று கருர் மாகராட்சி காந்திகிராமம் பூங்காவில் வார்டு எண் 39, 40, 41க்கு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில், கோரிக்கை தொடர்பான மனு செய்து பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் கரூர் காந்திகிராமம் பூங்காவில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: