மாநகராட்சி 92-வது வார்டில் `மக்களுடன் முதல்வர்’ சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

 

கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 92-வது வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர் நரசிம்மபுரம் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் \”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம் நேற்று நடந்தது. துணை மேயர் வெற்றிசெல்வன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி தொகுதி எம்.பி.,சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, இம்முகாமை துவக்கிவைத்தார்.

பின்னர், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், மாநகராட்சி தெற்கு மண்டல உதவி கமிஷனர் பிரேம் ஆனந்த், பேரூர் தாசில்தார் ஜோதிபாசு, மாநகராட்சி கவுன்சிலர்கள் மு.ராஜேந்திரன், இளஞ்சேரன், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, திமுக நிர்வாகிகள் மாரப்பண்ணன், சிவசக்தி மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொணடனர்.

The post மாநகராட்சி 92-வது வார்டில் `மக்களுடன் முதல்வர்’ சிறப்பு குறைதீர்க்கும் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: