அதன்படி இன்று மதியம் 3 மணியளவில் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் பங்கேற்குமாறு 23 தொழிற்சங்கங்களுக்கும், போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து, தொழிற்சங்க தரப்பில் கூறுகையில், ‘‘இன்று நடக்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்க 23 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுப்போம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களுடன் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.