தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள், வாழப்பாடி போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் 2 பேரின் உடலையும் மீட்டனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக உடல்களை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 மாதங்களே ஆவதால், சேலம் கோட்டாட்சியர் அம்பாயிரமும் விசாரணை மேற்கொண்டு வருகிறார். குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை செய்த நிலையில், காப்பாற்ற முயன்ற கணவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post வாழப்பாடி அருகே குடும்ப தகராறில் விபரீதம்: கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவரும் பரிதாப சாவு appeared first on Dinakaran.