கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

நெல்லை, டிச.31:தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோடு அன்னை தெரசாகாலனியை சேர்ந்தவர் பிச்சையா(61). மீனவர். இவர் நேற்று காலையில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் பகுதியில் படகுகள் பழுது பார்க்கும் யார்டில் பணியாற்றி வந்தார். அப்போது அவர் படகில் உள்ள கயிற்றை அகற்ற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்து மூச்சுத் திணறி பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவல் அறிந்த மரைன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிச்சையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடலில் தவறி விழுந்து மீனவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: