தேங்கிக்கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசி காற்றில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கொண்டக்கரை மற்றும் வெள்ளி வாயல் சாவடி ஊராட்சி சேர்ந்த சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் பலமுறை வருவாய்த்துறை, ஒன்றிய அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகளுக்கும் புகார் மற்றும் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க ஜனவரி 1ம் தேதி சமூக ஆர்வலர்கள் திருவொற்றியூர் நெடுஞ்சாலை வெள்ளி வாயல் சாவடி- கொண்டக்கரை இணைப்பு சாலை பகுதியில் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக தெரிவித்துள்ளனர்.
The post மீஞ்சூர் அருகே தனியார் நிறுவனம் கொட்டும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் அவதி: மறியல் நடத்த சமூக ஆர்வலர்கள் முடிவு appeared first on Dinakaran.