இவை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர்மோகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, விசாரணை முடியாத காரணத்தால் ஜாமீன் வழங்க வேண்டும் அல்லது வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட வேண்டும் என தினேஷ் சந்த் சுரானா தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத் துறை தரப்பில், புலன் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், விசாரணை முடியவில்லை எனக் கூற முடியாது எனவும், குற்றத்தின் மூலம் பெற்ற பணத்தை வேறு எங்கெல்லாம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என மேல் விசாரணை நடந்து வருவதாகவும் வாதிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், காவல் நீட்டிப்பை ரத்து செய்யவும், ஜாமீன் வழங்கவும் மறுத்து, தினேஷ் சந்த் சுரானா தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தனர். வீட்டுக்காவலில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், இந்த வழக்கை 6 மாதங்களில் விசாரித்து முடிக்கும்படி, சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.
The post சுரானா நிறுவன இயக்குநர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்: சிறப்பு நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.