இந்தத் தாக்குதலில் 18 பேர் பலியாகியுள்ளதாகவும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. சமீப காலமாக உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப் பெரிய வான்வழித் தாக்குதல்களில் ஒன்றாக இந்தத் தாக்குதல் அமைந்ததுள்ளது. வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து நான்கு பிராந்தியங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், மெட்ரோ நிலையம், குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
உக்ரைன் விமானப்படை 87 ஏவுகணைகளையும் 27 ஷாஹெட் வகை ட்ரோன்களையும் ஒரே இரவில் இடைமறித்ததாக உக்ரைனின் ராணுவத் தளபதி வலேரி ஜலுஷ்னி கூறியுள்ளார். இந்த தீவிரவாத தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம். நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்புக்காகவும் தொடர்ந்து போராடுவோம்” என அந்நாட்டின் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “புதினை நாங்கள் வெற்றி பெற விடமாட்டோம். உக்ரைனுடன் நாங்கள் தொடர்ந்து நிற்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.
The post உக்ரைன் மீது மீண்டும் சரமாரி தாக்குதல் நடத்திய ரஷ்யா: 18 பேர் உயிரிழப்பு.! 80க்கும் மேற்பட்டோர் காயம் appeared first on Dinakaran.