விஜயகாந்த் படத்திற்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி

தேவகோட்டை, டிச.30: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேவக்கோட்டையில் அனைத்து கட்சிகள் சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு துவங்கிய பேரணி தியாகிகள் பூங்காவில் நிறைவடைந்தது. அங்கு விஜயகாந்த் படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன், கண்ணங்குடி ஒன்றிய தலைவர் சரவண மெய்யப்பன், தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், துணைத் தலைவர் ரமேஷ், அமமுக அம்மா பேரவை மாவட்ட செயலர் இறகு சேரி குமார், மற்றும் திமுக, அதிமுக, அமமுக, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து பிரமுகர்கள், பொதுமக்கள் என கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

The post விஜயகாந்த் படத்திற்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: