சென்னை: விஜயகாந்த் உடலுக்கு பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் ரவி பச்சமுத்து நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பேட்டியளித்த அவர், குழந்தை போன்ற மனம் கொண்டவர் விஜயகாந்த் என பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் புகழாரம் சூட்டினார். விஜயகாந்தின் மறைவு தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு என்றும் அவர் தெரிவித்தார்.