இந்நிலையில், வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு அருண்குமார் போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பார்வதிக்கும், அருண்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் அருண்குமார் சற்று கோபமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பார்வதி, நேற்று அதிகாலை கணவன் நன்றாக தூங்கும் நேரத்தில், தனது குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் குழந்தை அழும் சத்தம் கேட்டு அருண்குமார் எழுந்து பார்த்த போது, தனது மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி துடித்தார். தகவலறிந்த கே.கே.நகர் போலீசார் விரைந்து வந்து, பார்வதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, அருண்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post காதல் கணவர் தினமும் குடித்துவிட்டு வந்ததால் விரக்தி 6 மாத குழந்தையை தவிக்கவிட்டு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.