தேசிய பேரிடராக மாநில அரசு தான் அறிவிக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்

ஊட்டி: ஊட்டியில் ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணை அமைச்சர் முருகன் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, சென்னை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புக்களை ஏன் ஒன்றிய அரசு தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை’ என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த முருகன், ‘மழை பாதிப்புகளை தேசிய பேரிடராக மாநில அரசு தான் அறிவிக்க வேண்டும்’ என்றார். தொடர்ந்து இதுதொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ‘இதனை அரசியல் ஆக்காதீர்கள்’ எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

The post தேசிய பேரிடராக மாநில அரசு தான் அறிவிக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் appeared first on Dinakaran.

Related Stories: