அரசு பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

காளையார்கோவில், டிச.27: காளையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் 2024 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் லதா தலைமை தாங்கினார். சாரண ஆசிரியர் நாகராஜன் முன்னிலையில் ஆசிரியர்கள் கோவிந்தராஜன், உதயகுமார், ராஜேஸ்வரி போஸ், ராஜ்குமார், சிவனேசன், காதம்பரி, அலுவலர்கள் மற்றும் சாரண மாணவர்கள் சேர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். ”இயற்கையை நேசிப்போம்” ‘‘பழமையை பாதுகாப்போம்’’ ஆகிய உறுதிமொழிகளை ஏற்றனர்.

The post அரசு பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா appeared first on Dinakaran.

Related Stories: