கன்னியாகுமரி சுனாமி நினைவு ஸ்தூபியில் அஞ்சலி

நாகர்கோவில், டிச. 27: சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி சுனாமி பூங்காவில் அமைந்துள்ள சுனாமி நினைவு ஸ்தூபியில் குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்னண் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி கிழக்கு மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஜென்சன் ரோச், சுந்தரம், மாவட்ட பிரதிநிதி சிதம்பர செல்வன், ஒன்றிய கவுன்சிலர் பிரேமலதா, ஆன்டோ போஸ்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் மற்றும் தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் கன்னியாகுமரியில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் செல்லசுவாமி தலைமையில் கன்னியாகுமரி சந்திப்பில் இருந்து ஊர்வலமாக சென்றனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அந்தோணி, மூத்த நிர்வாகி முருகேசன், மீன் தொழிலாளர் கூட்டமைப்பு மாநில தலைவர் செலஸ்டின் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post கன்னியாகுமரி சுனாமி நினைவு ஸ்தூபியில் அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: