ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் அதிகரித்து காணப்பட்டது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,880க்கும், சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.47,040க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,895க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.47,160க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 4 நாளில் சவரன் ரூ.560 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
The post தங்கம் விலை 4 நாட்களில் சவரன் ரூ.560 எகிறியது appeared first on Dinakaran.