இதில் மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் சுந்தர், மாவட்ட பிரதிநிதிகள் கைலாசம், ராஜேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள், அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட வானகரம் உயர்நிலைப் பள்ளியில் குழந்தை நேயப் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், ரூ.69.17 லட்சம் செலவில் கட்டப்பட்ட 4 வகுப்பறை கொண்ட கூடுதல் கட்டிடத்தை காரம்பாக்கம் கணபதி எம்எல்ஏ திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வில்லிவாக்கம் தெற்கு ஒன்றியச் செயலாளர் அயப்பாக்கம் துரைவீரமணி, ஒன்றிய குழு தலைவர் கிரிஜா, வானகரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா சீனிவாசன், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ஞானபிரகாசம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post கனமழையால் பாதிக்கப்பட்ட 3,000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்: கணபதி எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.