இந்த நிலையில், விராத் கோஹ்லி – ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி 4வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 68 ரன் சேர்த்தது. ஷ்ரேயாஸ் 31 ரன், கோஹ்லி 38 ரன், ஆர்.அஷ்வின் 8 ரன் எடுத்து ரபாடா பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். இந்தியா 35 ஓவரில் 121 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து மீண்டும் சரிவை சந்தித்தது. கே.எல்.ராகுல் – ஷர்துல் தாகூர் இணை உறுதியாக விளையாடி 7வது விக்கெட்டுக்கு 43 ரன் சேர்த்தது. ஷர்துல் 24 ரன் எடுத்து ரபாடா வேகத்தில் எல்கர் வசம் பிடிபட்டார். பும்ரா 19 பந்தில் 1 ரன் எடுத்து மார்கோ யான்சென் வேகத்தில் கிளீன் போல்டானார். இந்தியா 59 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன் எடுத்திருந்தபோது மழை கொட்டியதால், அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கே.எல்.ராகுல் 70 ரன், சிராஜ் (0) களத்தில் உள்ளனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ரபாடா 5, பர்கர் 2, யான்சென் 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.
The post முதல் நாளில் இந்தியா 208/8: ரபாடா 5 விக்கெட், ராகுல் 70* ரன் appeared first on Dinakaran.