பட்டாசு ஆலை வெடித்து சிதறியது

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (55). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை அதே பகுதியில் உள்ளது. இங்கு 15 அறைகள் உள்ளன. தீபாவளி பண்டிகை முடிந்து பட்டாசு தயாரிப்பிற்காக நேற்று காலை ஆலை திறக்கப்பட்டது. மருந்து வைத்திருந்த ஒரு அறையை தொழிலாளி திறந்தபோது குபுகுபுவென புகை வந்தது. சிறிது நேரத்தில் மணிமருந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து அறை தரைமட்டமானது. தொழிலாளர்கள் ஓடியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

The post பட்டாசு ஆலை வெடித்து சிதறியது appeared first on Dinakaran.

Related Stories: