இந்நிலையில், கிறிஸ்துமசை ஒட்டி, கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவரான போப் பிரான்சிஸ், ரோம் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் வருடாந்திர உரையாற்றினார். ‘ஊர்பி எத் ஓர்பி’ எனப்படுவதும் ரோமுக்கும், உலகிற்குமான செய்தியில் அவர், ‘‘பெத்லகேமில் கிறிஸ்துவின் பிறப்பு பற்றிய விவிலியக் கதை அமைதியின் செய்தியை உலகிற்கு அனுப்பியது. அதன்படி எனது கிறிஸ்துமஸ் தின ஆசீர்வாதத்தை உலகில் அமைதிக்கான அழைப்புக்காக அர்ப்பணிக்கிறேன். இந்த ஆண்டு பெத்லகேம் துக்கமும் அமைதியும் நிறைந்த இடமாக உள்ளது.
இஸ்ரேல் பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும். அதே போல காசாவில் அப்பாவி பொதுமக்களை அறுவடை செய்யும் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும். ஆர்மீனியா, அஜர்பைஜான், சிரியா, ஏமன், உக்ரைன், தெற்கு சூடான், காங்கோ, கொரிய தீபகற்பத்தில் அமைதிக்கான முயற்சிகள் வலுப்பெற வேண்டும். மரண கருவிகள் போர்களின் எரிபொருளாக உள்ளன. ஆயுத உற்பத்தி, விற்பனை மற்றும் வர்த்தகம் அதிகரித்து வரும் நிலையில் நாம் எப்படி அமைதியைப் பற்றி பேச முடியும்’’ என வேதனையுடன் பேசினார்.
The post இஸ்ரேல், பாலஸ்தீனம் உட்பட உலக அமைதிக்கு போப் வலியுறுத்தல்: கிறிஸ்துமஸ் உரையில் வேதனை appeared first on Dinakaran.