40 கிலோ காப்பர் ஒயர், 120 லிட்டர் ஆயில் திருட்டு

தர்மபுரி, டிச.25: மாரண்டஅள்ளி சிஎம்.புதூர் ஏரிக்கரையில் டிரான்ஸ்பார்மரில், திடீரென மின்சாரம் தடைபட்டது. இதையடுத்து மாரண்டஅள்ளி துணை மின்நிலைய ஊழியர்கள் சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த 40 கிலோ காப்பர் ஒயர் மற்றும் 120 லிட்டர் ஆயில் திருட்டு போனது தெரியவந்தது. திவாகர், மாரண்டஅள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து, காப்பர் ஒயர்களை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.

The post 40 கிலோ காப்பர் ஒயர், 120 லிட்டர் ஆயில் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: