இந்தநிலையில் பழநி பகுதியில் தற்போது கடும் பனி நிலவி வருகிறது. காலை 10 மணி வரை கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இந்நிலையில் நேற்று பனியின் காரணமாக பழநி பஸ்நிலையத்தின் பிளாட்பாரங்களில் படுத்திருந்த 2 முதியவர்கள், புதிய பஸ்நிலையத்தின் விரிவாக்க பகுதியில் படுத்திருந்த 2 முதியவர்கள் என 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடும் பனிப்பொழிவு நிலவுவதால் சாலையோரங்களில் படுத்துறங்கும் முதியவர்களை மீட்க வேண்டுமென பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பழநியில் கடும் பனி 4 முதியவர்கள் பலி appeared first on Dinakaran.