காரைக்குடி, டிச.22: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட் சார்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நாளை மற்றும் 24ம் தேதி, 25ம் தேதி ஆகிய நாட்களில் வைகுண்டு ஏகாதசி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை என தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது. சென்னை, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து வேளாங்கண்ணி மற்றும் அனைத்து ஊர்களு சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது.
மீண்டும் பயணிகள் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல வசதியாக 25, 26 ஆகிய தேதிகளில் திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள். கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து கோவை, மதுரை, திருப்பூர் மற்றும் தஞ்சாவூர், வேளாங்கண்ணி, புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய ஊர்களில் இருந்து திருச்சிக்கும் சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது. தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் திரும்ப செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து கொள்ளலாம்.
முன்பதிவு செய்யும் பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 26ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு செல்லும் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. முக்கிய பஸ் ஸ்டாண்டுகளில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள் பயணிகளின் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ் இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்கள்.
The post கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.