நெல்லை : நெல்லை மாவட்டத்தில் அதிகனமழையின் போது முன்னெச்சரிக்கையாக 142 கர்ப்பிணிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக 696 கர்ப்பிணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. 142 கர்ப்பிணிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2 நாட்களில் 91 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. பிரசவ எண்ணிக்கை விவரங்கள்: ஆரம்ப சுகாதார நிலையம் 14, அரசு மருத்துவமனை 13, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 21, தனியார் மருத்துவமனை 43
The post நெல்லையில் அதிகனமழையின் போது முன்னெச்சரிக்கையாக 142 கர்ப்பிணிகள் மருத்துவமனைகளில் சேர்ப்பு!! appeared first on Dinakaran.