இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் அருகே நெஞ்சை பதற வைக்கும் துயரச் சம்பவ நடந்துள்ளது. மழை வெள்ளத்தால் நவலட்சுமிபுரத்தில் 2 முதியவர், 1 பெண் உட்பட 3 பேர் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும், அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் இந்த பகுதியில் 2 மூதாட்டி, 2 முதியவர் என 4 பேர் கனமழையால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு இறுதி சடங்குகளை செய்ய முடியாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். எனவே மீட்படையினர் இந்த பகுதிக்கு வந்து 4 பேரின் உடலை மீட்டு அவர்களுக்கான இறுதி சடங்குகளை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 3 நாட்களுக்குப் பிறகு வெளி உலகத்துக்கு தெரியவந்த கோரமான பாதிப்பு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
The post வரலாறு காணாத வெள்ளத்தால் உருக்குலைந்த ஸ்ரீவைகுண்டம்: வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் 4 பேரின் சடலம் மீட்பு appeared first on Dinakaran.