செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஒன்றியம் பெரிய வெளிக்காடு ஊராட்சி சார்பில் பேராசிரியர் அன்பழகன் 102வது பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினரும், ஊராட்சி மன்ற தலைவருமான வெளிக்காடு ஏழுமலை, பேராசிரியர் அன்பழகன் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, திமுக கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், லத்தூர் வடக்கு ஒன்றிய அவை தலைவர் லோகநாதன், உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக முன்னோடிகள், உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post வெளிக்காடு ஊராட்சியில் பேராசிரியர் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.