பின்னர் மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளி வழியாக திருவான்மியூர் செல்லும் அனைத்து மாநகர பேருந்துகளும் லஸ் கார்னர் வழியாக திருப்பிவிடப்பட்டன. மேலும், மந்தைவெளி ஆர்.கே.மடம் சாலையில் முற்றுலும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு பள்ளத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் சரிசெய்து கான்கிரீட் மூலம் சீரமைத்தனர். இந்த சம்பவத்தால் மயிலாப்பூரில் இருந்து ஆர்.கே.மடம் சாலை வழியாக மந்தைவெளி செல்லும் பகுதியில் முற்றிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மாற்று பாதை வழியாக போலீசார் திருப்பிவிட்டதால் வாகன ஓட்டிகள் சற்று சிரமத்திற்கு ஆளாகினர்.
The post மந்தைவெளி ஆர்.கே.மடம் சாலையில் திடீர் பள்ளம்: போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.