செல்லப்பன் வித்யாமந்திர் பள்ளியில் விளையாட்டு விழா பரிசளிப்பு

காரைக்குடி, டிச.17: காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திர் இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி 13ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் சங்கர சுப்பிரமணியன் வரவேற்றார். ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் எம்.துரை, பள்ளி குழும தலைவர் செல்லப்பன் ஆகியோர் துவக்கி வைத்தனர். விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் சுந்தர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிர்வாக இயக்குநர் சங்கீதாசத்தியன், பள்ளி கல்வி இயக்குநர் முனைவர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர்.

பள்ளி தாளாளர் சத்தியன் தலைமை வகித்து பேசுகையில், பள்ளி கல்வியே ஒருவரின் அடிப்படையாக அமைகிறது. அந்த கல்வியை சர்வதேச தரத்தில் வழங்க வேண்டும் என்பதற்காக இப்பள்ளி துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். மாணவர்களுக்கு கல்விக்கு இணையாக விளையாட்டு உள்பட பல்வேறு திறமைகளை வளர்க்கிறோம். கல்வியால் மட்டுமே நாம் நினைத்ததை சாதிக்க முடியும். ஒவ்வொரு மாணவர்களுக்குள்ளும் ஒரு திறமை ஒளிந்து உள்ளது. அதனை வெளிக்கொண்டு வந்து அவர்களை சிறந்தவர்களாக மாற்றுவதே எங்கள் நோக்கம். ஆசிரியர்கள், பொற்றோர்களின் ஒத்துழைப்புடன் திறன்மிகு மாணவர்களை உருவாக்கி வருகிறோம். சாதாரண மாணவர்களையும் சாதனையாளர்கள் ஆக்குவதே எங்கள் நோக்கம் என்றார். பள்ளி துணை முதல்வர் சுபாஷினி நன்றி கூறினார்.

The post செல்லப்பன் வித்யாமந்திர் பள்ளியில் விளையாட்டு விழா பரிசளிப்பு appeared first on Dinakaran.

Related Stories: