அதே போல், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி , தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 18ல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. தமிழ்நாடு, இலங்கை கடலோரம், தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்பு உள்ளதாலும் இன்றும் நாளையும் மணிக்கு 40 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதாலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
The post கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மிக கனமழை : வானிலை ஆய்வு மையம் வார்னிங்!! appeared first on Dinakaran.