மிக்ஜாம் புயல் காரணமாக மெட்ரோ நிறுவனத்திற்கு ரூ.210 கோடி சேதம்

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ரூ.210 கோடி சேதம் ஏற்பட்டுள்ளது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ நிர்வாக அதிகாரி கூறியதாவது: மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளால் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ரூ.210 கோடி சேதம் என கணக்கிடப்பட்டுள்ளது. முதற்கட்ட திட்டத்தில் ரூ.15 கோடியும், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 2ம் கட்ட திட்டத்தில் ரூ.195 கோடியும் என மொத்தம் ரூ.210 கோடி சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் வெள்ள சேத பாதிப்பை கணக்கீடு செய்து தமிழ்நாடு அரசிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் புயல் நேரத்தில் எந்த பாதிப்பும் இன்றி பயணிகளுக்கு தொடர்ந்து சேவை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

The post மிக்ஜாம் புயல் காரணமாக மெட்ரோ நிறுவனத்திற்கு ரூ.210 கோடி சேதம் appeared first on Dinakaran.

Related Stories: