அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி..!!

திண்டுக்கல்: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 3 நாள் விசாரணைக்கு பிறகு அங்கித் திவாரியை டிச.14-ம் தேதி மாலை 5 மணிக்கு ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு 3 நாள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் ரூ.20 லட்சம் லஞ்சப் பணத்துடன் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கையும் களவுமாக பிடிபட்டார்.

The post அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி..!! appeared first on Dinakaran.

Related Stories: