மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமது எழுத்துக்களால், சுதந்திரப் போராட்டத்தில் வீரம் விதைத்த புரட்சியாளர், பெண்ணுரிமை, சமத்துவம், சமூகநீதி பேசிய முன்னோடி, மண் உள்ள காலம் வரை மறக்க முடியாத நம் மகாகவி, சுப்பிரமணிய பாரதியார் பிறந்த தினம் இன்று.தாய்மொழியையும் தாய்நாட்டையும் உயிரெனக் கொண்ட தேசியவாதி. பன்மொழி வித்தகர். இன்றைய அறிவியல் முன்னேற்றங்கள் அனைத்தையும் அன்றே கணித்தவர். “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற பாரதியாரின் கனவு, இன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களால் நனவாகி வருகிறது. மகாகவியின் இறவாப் புகழ் போற்றி வணங்குகிறோம். என்று குறிப்பிட்டுள்ளார்.
The post மகாகவி பாரதியாரின் பிறந்த நாளில் அவருக்கு எனது வீரவணக்கங்கள் : ஓபிஎஸ், அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து!! appeared first on Dinakaran.