கட்டிடத்தின் தரை தளத்தில் தூண் அமைப்பதற்காக போடப்பட்டிருந்த சாரத்தை தொழிலாளர்கள் 5 பேர் பிரித்து எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென சாரத்துடன் சேர்ந்து காங்கிரீட் தூணும் பலத்த சத்தத்துடன் சரிந்து விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக 5 தொழிலாளர்களும் உயிர் தரப்பினர். சரிந்து விழுந்த தூண் கட்டிடத்திற்கு வெளிப்புறமாக விழுந்ததால் 5 பேரும் உயிர் தப்பியது தெரியவந்தது. ஒருவேளை தூண் கட்டிடத்தின் உள்பக்கம் சரிந்திருந்தால் 5 பேரின் நிலைமை கேள்விக்குறியாகி இருக்கும். அரசு கட்டிடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே காங்கிரீட் தூண் சரிந்து விழுந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, நகராட்சி புதிய கட்டிடம் இடிந்து விழும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாக வருவதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post மாங்காடு நகராட்சி அலுவலக புதிய கட்டிடம் இடிந்து விழுந்தது: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 தொழிலாளர்கள் appeared first on Dinakaran.