மேலும் நாளை அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பள்ளி செல்வதை உறுதிப்படுத்தவேண்டும். பள்ளி கட்டிடங்கள், மேற்கூரைகள் பாதிப்படையாமல் இருக்கிறதா? பள்ளி வளாகத்திற்குள் விஷ பூச்சிகள், பாம்பு போன்ற விஷஜந்துக்கள் நடமாட்டம் உள்ளதா? எனவும் ஆய்வு செய்யவேண்டும். பள்ளிகளில் மழைநீர் தேங்கி இருந்தால் அவற்றை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். பள்ளி வளாகத்தில் தூய்மை பணிகளை மேற்கொள்ளவேண்டும். வகுப்பறைகளை தூய்மைப்படுத்தவேண்டும். மதிய உணவு மற்றும் காலை உணவு தயாரிக்க பயன்படும் உணவு பொருட்கள் பாதுகாப்பாக இருக்கிறதா? எனவும் ஆய்வு செய்து நாளை மாலைக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். வரும் 11.12.2023 திங்கட்கிழமை பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதால் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
The post பள்ளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு காஞ்சி கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.