குதிரையாறு அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

பழனி: பழனி குதிரையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர்வரத்து வினாடிக்கு 436 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. குதிரையாறு அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதால் நீர்வளத்துறை சார்பில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post குதிரையாறு அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.

Related Stories: