வடக்கு மண்டலம் சார்பில் சென்னைக்கு ரூ.5 லட்சம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

 

கோவை, டிச.8: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல் பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கனமழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் நடந்து வருகின்றன. இந்நிலையில், கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் அலுவலகத்தில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் ஆகியோர் அனுப்பி வைத்தனர். இதில், மேயர் சார்பில் ரூ.2 லட்சம், வடக்கு மண்டல தலைவர் சார்பில் ரூ.1 லட்சம் மற்றும் வடக்கு மண்டல அதிகாரிகள், தன்னார்வலர்கள் மூலம் ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதில், ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், 10 கிலோ அரிசி, சேலை, வேஷ்டி, பாத்திரம், குடிநீர், பெட்ஷிட், பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சரக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், ஏற்கனவே வடக்கு மண்டலம் சார்பில் மீட்பு பணிக்காக சென்ற பணியாளர்களுக்கு ரூ.1.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பொதுமக்களுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, மூன்றாவது முறையாக நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் என பலர் பங்கேற்றனர்.

The post வடக்கு மண்டலம் சார்பில் சென்னைக்கு ரூ.5 லட்சம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.