சென்னை : அடையாறு திரு.வி.க. பாலத்தின் கீழ் ராட்சத கழிவு நீர் குழாயில் விரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அடையாறு ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரால் உண்டான அழுத்தத்தால் குழாயில் விரிசல் ஏற்பட்டது. கிரீன் வேஸ் சாலை, ஆர்.ஏ.புரம், மந்தைவெளியில் இருந்து அடையாறு நோக்கி வரும் வாகனங்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. பாலத்தில் 2 இடங்களில் ஏற்பட்டுள்ள விரிசலை சரிசெய்யும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ வாட்டர் நிர்வாக இயக்குனர் வினய் தகவல் அளித்துள்ளார்.
The post சென்னை அடையாறு திருவிக பாலத்தில் விரிசல். ஒரு வழி பாதை ஆக மாற்றம்..! appeared first on Dinakaran.