அப்போது கிருஷ்ணவேணியின் மகனுக்கு இந்திய உளவுப்பிரிவான ‘ரா’ பிரிவில் (ரிசர்ஜ் அனலைஸ் விங்க்) வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதற்கான ஆவணங்களையும் காண்பித்துள்ளார். இதை நம்பிய கிருஷ்ணவேணி, 2021ம் ஆண்டு முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை பல்வேறு தவணைகளில் ரூ.13 லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர் கூறியவாறு வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் இழுத்தடித்து வந்தார். இதுதொடர்பாக கிருஷ்ணவேனி திருச்சி மாநகர கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின்பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், மோசடியில் ஈடுபட்ட பிரகாஷ், போலி ஐஏஎஸ் அதிகாரி என்பதும், சிதம்பரம் வைகை நகர் பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து நேற்றுமுன்தினம் சிதம்பரம் சென்ற போலீசார், பிரகாஷை கைது செய்தனர்.
The post ‘ரா’ பிரிவில் வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சம் மோசடி: போலி ஐஏஎஸ் அதிகாரி கைது appeared first on Dinakaran.
