அதிகனமழை காரணமாக சென்னையில் உள்ள அணைகளுக்கான நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை: புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் 21 அடியை எட்டியுள்ளது. இன்று காலையில் 2,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் உபரி நீர் வெளியேறும் சாமியார் மடம், தண்டல் கழனி உள்ளிட்ட இடங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே போல் ஆரணி ஆற்றிலும் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு காணப்படுகிறது. பிச்சாட்டூர் அணையில் 3,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் அதிகனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 8,881 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து 3,162 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம், ஜமீன் கொரட்டூர் பகுதியில் கடந்த 4 மணி நேரத்தில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

The post அதிகனமழை காரணமாக சென்னையில் உள்ள அணைகளுக்கான நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: